
பொதுத் தேர்தலில் அதிக எண்ணிக்கையிலானவர்களை ஓட்டளிக்க செய்வதற்காக தேசிய சின்னங்கள் என்ற கவுரத்தை தேர்தல் கமிஷன் அளித்து வருகிறது. இதுவரை இந்த கவுரவம் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி, குத்துச் சண்டை வீராங்கணை மேரி கோம், சானியா மிர்சா, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆகியோருக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு, எவ்வாறு ஒட்டளிப்பது என்பது குறித்தும் மக்களுக்கு புரிய வைக்கும் விளம்பரங்களில், தேர்தல் கமிஷனுக்காக நடித்துக் கொண்டுகின்றனர்.