
கன்னட படத்தில் நடித்து வந்த ஷோனா சாப்ரா. ‘தென்னிந்திய படங்களில் இனி நடிக்க மாட்டேன்‘ என்று சபதம் செய்திருக்கிறார். பிரஜ்வால் தேவராஜுடன் ‘சவால்‘ என்ற படத்தில் நடித்த இவருக்கு துன்யா விஜய்யுடன் ‘பிளாக் கோப்ரா‘ என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. இதைகேட்டு வேதனை அடைந்த ஷோனா, பெங்களூரிலிருந்து தனது வீட்டை காலி செய்துவிட்டு பெட்டி படுக்கையை மூட்டை கட்டிக்கொண்டு மும்பையில் குடியேறினார். முன்னதாக தனது மேனேஜரை அழைத்து, ‘இனிமேல் தென்னிந்திய படங்கள் எதிலும் நான் நடிக்க மாட்டேன். யாராவது கேட்டால் இதையே எனது பதிலாக சொல்லிவிடுங்கள்‘ என்றார்.