
தமிழ்த் திரையுலகில் மூன்று முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்களான இயக்குனர் சுசீந்திரன், ஒளிப்பதிவாளர் மதி, கலை இயக்குனர் ராஜீவன் ஆகிய மூவரும் இணைந்து புதிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளனர்.
இவர்களது தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் மற்றும் முதல் திரைப்படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. சுசீந்திரன், மதி, ராஜீவன் மூவரும் இணைந்து “நான் மகான் அல்ல, பாண்டிய நாடு” போன்ற படங்களில் பணி புரிந்திருக்கிறார்கள்.
இந்த படங்களில் இணைந்து பணியாற்றிய போது அவர்களுக்கிடையே நல்ல நட்பு உருவானது. தற்போது அந்த நட்பு மேலும் விரிவடைந்து அடுத்த கட்டத்தை அடைந்துள்ளது. சுசீந்திரன் தற்போது விஷ்ணு, ஸ்ரீதிவ்யா நடிக்க ‘ஜீவா’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.