Recent Post

சோக்கு சுந்தரம் படத்துக்காக கானா பாலா பாடிய கலக்கல் பாட்டு!



கோலிவுட்டில் கானா பாலாவுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. அவர் பாடினால் அந்த பாடல் இளவட்ட ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ஹிட்டாகி விடுவதால், அவரை வைத்து ஒரு பாடலையாவது பாட வைத்து விட வேண்டும் என்று டைரக்டர்களும், படாதிபதிகளும் ஆசைப்படுகிறார்கள்.

அந்த வகையில், கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் பிசியாக பாடிக்கொண்டிருக்கும் கானா பாலா, தனது முதல் படமான அட்டகத்தி படத்தில் நடுக்கடலுல கப்பல இறங்கி தள்ள முடியுமா -என்று பாடியதைப்போன்று இப்போது சோக்கு சுந்தரம் என்ற படத்திற்காகவும் ஒரு கப்பல் பாடலை பாடியிருக்கிறார்.

இந்த படத்துக்காக இளைய கம்பன் எழுதிய, ''கப்பல் விடாதே கப்பல் விடாதே கட்டாந்தரையில் கப்பல் விடாதே, கவுந்து விடாதே கவுந்து விடாதே கன்னக்குழியில் கவுந்து விடாதே...'' என்பதுதான் அந்த பாடலின் வரிகள். இப்பாடலின் டியூனைக்கேட்டதும் குஷியாகி விட்டாராம் கானா பாலா. இந்த பாடல் இந்த 2014ம் ஆண்டின் சூப்பர் ஹிட் பாடலாகப்போகிறது என்று சொன்னவர், ஒரே டேக்கில் பாடியும் ஓ.கே செய்து விட்டாராம்.

இதுபற்றி படத்தின் இயக்குனர் ஆனைவாரி ஸ்ரீதர் கூறுகையில், இதற்கு முன்பு நான் வேடப்பன், ஒரு சந்திப்பில் ஆகிய படங்களை இயக்கியிருக்கிறேன். அந்த படங்களில் கானா பாடல் வைக்கவில்லை. ஆனால் இப்போது கானா பாடல் டிரன்டாகி விட்டதால் பாலாவை மனதில் கொண்டே இந்த பாடலை பாட வைத்தோம்.

அவர் பாடியதால் அந்த பாடலும் மெருகேறியிருப்பதோடு, படத்துக்கும் பெரிய பலமாகியிருக்கிறது என்று சொல்லும் அவர், கானா பாலா பாடிய இந்த பாடல் சிறப்பாக அமைந்ததால், அதிக செலவு பண்ணி கலர்புல்லாக அந்த பாடல் காட்சியையும் படமாக்கியிருக்கிறோம் என்கிறார்.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)