போபால்: தொலைக்காட்சித் தொடர்களிலும் நடிக்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார் நடிகை சன்னிலியோன். வெளிநாடுகளில் நீலப்படங்களில் நடித்து பிரபலமானவர் சன்னிலியோன். இவரது நூற்றுக்கும் மேற்பட்ட நீலப்படங்கள் இன்றளவும் இணையத்தில் பிரபலமாக உள்ளது. இந்நிலையில் தற்போது இந்திப்படங்கள் சிலவற்றில் நாயகியாக நடித்து வருகிறார் சன்னிலியோன். இவர் நடித்த ஜாக்பாட், ராகினி எம்.எம்.எஸ் 2 ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானவை. இந்நிலையில் நேற்று போபால் வந்த சன்னிலியோன் செய்தியாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது :-என்னுடைய சில படங்கள் பல எதிர்ப்புகளை மீறி வெளிவந்துள்ளது. படத்தை படமாக பார்க்க வேண்டும் ரசிகர்கள் படத்தை எதிர்மறையாக பார்க்க வேண்டாம்.
தற்போது மக்கள் இடையே சீரியல்களில் அதிகமாக பிரபலம் அடைந்து வருகிறது. தயாரிப்பாளர் அல்லது இயக்குநர் யாராவது வந்து தொலைகாட்சிகளில் நடிக்க தயாராக இருக்கறீர்களா என்று கேட்டால் அதற்க்கு மறுக்காமல் தொலைகாட்சி தொடர்களில் நடிக்க தாயாராக உள்ளேன்.
நான் கடுமையாக உழைக்கும் பெண். அதே சமயம் வீட்டில் நல்ல மனைவியாகவும் இருப்பேன் என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சன்னிலியோனை தமிழில் ஜெய்-சுவாதி நடிப்பில் தயாராகும் ‘வடகறி' படத்தில் குத்துப் பாடலுக்கு ஆட வைக்க முயற்சிகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது