Recent Post

அமீர்கானை அதிர வைத்த பேஸ்புக் செய்தி!



சமீபகாலமாக சமூக வலைதளங்களில் தாறுமாறாக வெளியாகும் அவதூறு செய்திகளால் அதிர்ந்து கிடக்கிறார்கள் பிரபலங்கள்.
குறிப்பாக சினிமா நடிகர்-நடிகைகள் தங்களைப்பற்றி உண்மைக்கு புறம்பாக வெளியாகும் செய்திகள் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு சைபர் கிரைம் போலீஸை நாடிக்கொண்ட வருகிறார்கள். அந்த வகையில், இந்தி நடிகர் அமீர்கானும் கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பை போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.
அதில், நான் தற்போது தொலைக்காட்சி ஒன்றில் சத்யமேவ ஜெயதே என்றொரு நிகழ்ச்சி நடத்தி வருகிறேன். அதில், பெண்களுக்கு இழைக்கப்படும் வன்கொடுமை, பெண் சிசு கொலை உள்பட நாட்டில் நடக்கும் பல சமூக அவலங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
இந்த நிலையில், நான் ஒரு சமூக அமைப்பிடம் பெருந்தொகையை பெற்று அதை, மசூதி கட்டவும், முஸ்லீம் இளைஞர்களின் நலனுக்காகவும் வழங்கியதாக பேஸ்புக்கில் தவறான செய்தி பரவியுள்ளது.
அதனால் இந்த செய்தியை வெளியிட்ட நபரை கண்டுபிடித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அமீர்கானின் இந்த புகாரை அடுத்து பேஸ்புக்கில் இந்த செய்தியை பரப்பியவரை கண்டு பிடிக்க சைபர் கிரைம் போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)