
அரசியல் விவகாரங்களிலிருந்து ஒதுங்கி இருக்கும் மாதவன், திடீரென தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். கோலிவுட் டாப் ஹீரோக்கள் பலர் அரசியல்பற்றி பேசக்கூட தயங்குகின்றனர். கோலிவுட்டிலிருந்து பாலிவுட்டுக்கு சென்றிருக்கும் நடிகர் மாதவன் தனது அரசியல் கருத்தை வெளியிட்டிருக்கிறார். இதுபற்றி அவர் கூறி இருப்பதாவது: வரும் நாடாளுமன்ற தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே ஒவ்வொரு நபரும் தங்கள் வாக்கை பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதுவொரு சாதாரண மனிதனின் கடமையாகும்.
இங்கு எந்த அரசியல் கட்சி பற்றியும் நான் குறிப்பிடவில்லை. பொது மக்களைப்பற்றியே குறிப்பிடுகிறேன். நாட்டை நேசிப்பவராக இருந்தால் வாக்களியுங்கள். உங்கள் வாக்கை இந்த நாடும், உலகமும் கேட்கட்டும்.